உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
சென்னை: ''ஜிடிபி குறித்து காங்கிரஸ் நிர்வாகி கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. உபி., உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நிருபர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். காங்கிரஸ் தலைவரும், திமுக தலைவரும் பேசி முடிவு செய்வார்கள்.
அவசியமில்லை
ஜிடிபி குறித்து காங்கிரஸ் பிரவீன் கூறியதில் உடன்பாடு கிடையாது. இந்திய மாநிலங்களில் தமிழகம் தான் கடந்தாண்டு அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது என நிடி ஆயோக் அறிக்கை கொடுத்துள்ளது. உபி உடன் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நிறைவேறாது
ஜிராம்ஜி என்ற வார்த்தைக்கு விளக்கத்தை சொல்ல முடியுமா? எந்த இந்தி சொற்களை அது குறிக்கிறது என சொல்ல முடஇயும். ஜி,ஆர்,எம்,ஜி என்றால் என்ன என சொல்ல முடியுமா? பல எம்பிக்கள் என்ன என கேட்கின்றனர்.
இந்த திட்டத்தில் குறைகள் உள்ளன. உத்தரவாதம் இல்லை. மத்திய அரசு, மாநில அரசின் உத்தரவாதம் இல்லை.
மொத்த செலவில் 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என்கின்றனர். ஏற்கனவே பல மாநிலங்கள் நிதி ஆதாரம் குறைந்தவையாக உள்ளன. 40 சதவீதம் மாநில அரசின் பொறுப்பு என்றால் எந்த மாநிலத்திலும் நிறைவேறாது.
பாஜ அரசு, முந்தைய காலத்தில் சராசரியாக 50 நாட்கள் தான் வேலை கொடுத்துள்ளனர். இப்போது 100 நாட்கள் கொடுக்க வழியில்லை. 125 என்கின்றனர். ஏன் அத்தோடு நிறுத்திவிட்டார்கள். 365 என சொல்ல வேண்டியது தானே. 125 சொன்னாலும் ஒன்று தான். 365 நாட்கள் என சொன்னாலும் ஒன்றுதான்.
மக்களுக்கு தெரியும்
இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி பிப்.,15ல் பேசிய பேச்சை நினைவுபடுத்துகிறேன்.
'' இந்த திட்டத்தை ஏற்று கொள்ளவில்லை. ஆனால் இந்த திட்டத்தை ஒழிக்க மாட்டேன். எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்றால், திட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஐமு கூட்டணி படுதோல்விக்கு நினைவுச்சின்னமாக இந்த திட்டம் இருக்கும்'' என்றார்
அவரால் நிறைவேற்ற முடியாது என்று எங்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.வேலைவாய்ப்பு திட்டத்தை அவர்கள் ஒழித்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததை காங்கிரஸ் கண்டிக்கிறது.
துணைவேந்தர் நியமனம்
பல மாநிலங்களில் துணைவேந்தர்களை அரசு நியமிக்கிறது. இங்கு கவர்னர் நியமிப்பார் என சட்டம். இதுபோன்ற கவர்னர் வருவார் என சட்டத்தை இயற்றியவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலம், கட்டடம் அரசுக்கு சொந்தமானது. ஆசிரியர்களை அரசு நியமிக்கும்போது துணைவேந்தர்களை ஏன் அரசு நியமிக்கக்கூடாது.
மத்திய பல்கலைக்கு மத்திய அரசு தானே துணைவேந்தரை நியமிக்கிறது. இங்குள்ள பல்கலைக்கு துணைவேந்தர்களை ஏன் மாநில அரசு நியமிக்கக்கூடாது. இதற்கு கவர்னர், ஜனாதிபதி பதில் சொல்லவில்லை. காலத்துக்கு ஏற்ப சட்டத்தை மாற்ற வேண்டும்
பென்சன் திட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது வாஜ்பாய் அரசு. இதனை ஐமு அரசு அறிமுகம் செய்தது. மத்திய அரசு ஊழியர்கள் போராடிய போது ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை மோடி அரசு நியமித்தது. அக்குழு பலரின் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், புதிய பென்சன் திட்டம் வேண்டும் என்றால் அதில் தொடருங்கள். மாற்றாக ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் அறிமுகம் செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை மோடி அரசு அமல் செய்து வருகிறது
தற்போது, தமிழகத்தில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு நேற்று அறிக்கை கொடுத்துள்ளது.
அரசின் அறிக்கை வரட்டும். மோடி அரசு அமல் செய்கின்ற புதிய திட்டத்தை ஒட்டி தான் தமிழக அரசு அறிக்கை இருக்கும் என நினைக்கிறேன் யூகிக்கிறேன். பார்க்கலாம்.
பழக்கம்
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக ஒரு பழக்கம் இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுக்கு முன்பு வந்த செய்தி கூடபத்திரிகையில் வந்துள்ளது. எந்த பழக்க வழக்கங்கள் வழிபாடு நிலையங்களில் இருக்கிறதோ அதை மாற்ற முயற்சி செய்யக்கூடாது. தொன்று தொட்டு எந்த பழக்க வழக்கம் இருக்கிறதோ அதை கடைபிடிக்கவேண்டும் என்பது எனது கருத்து.
மக்கள் முடிவு
விஜய் எதிர்க்கட்சி தலைவராக வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.யார் எதிர்க்கட்சியாக வந்தால் என்ன?ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இருப்பது தான் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி, என்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்.மற்ற கருத்துகள் மிகைப்படுத்துப்படுகிறது எனது கருத்து மிகைப்படுத்தப்படலாம். எனது கருத்து பயனே கிடையாது.திமுக தலைவர் காஙகிரஸ் தலைவர் எடுப்பது தான் நிலைப்பாடு. முடிவு.
தனிப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ,நபர்கள் தங்களது கருத்துக்களை சொல்லாம். பேச்சுரிமை உள்ள கட்சி. முடிவு எடுப்பது திமுக, காங்கிரஸ் தலைவர் எடுப்பது தான் முடிவுதனி மனிதனின் பேச்சுரிமை வேறு. கட்சியின் முடிவு வேறு. இவ்வாறு அவர் கூறினார்.
உபி மக்கள் தொகை தமிழகத்துடன் ஒப்பிடும் போது எத்தனை மடங்கு அதிகம் ....அப்படி பார்த்தால் .....தமிழ்நாட்டை விட உபி மாநிலம் தானே அதிகம் கடன் வாங்கி இருக்க வேண்டும் ??
பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் தனது மகளை தனது சகோதரனின் மகனுக்கு திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவல்பிண்டியில் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று ராவல்பிண்டியில் நடைபெற்றதாக தகவல்.
சிதம்பரம் சார் . நீங்கள் இனி ஒய்வு எடுக்க வேண்டிய முதியவர். வீணாக பேசி கொண்டிருக்க ப்டாது .
அவர் ஓய்வெடுக்க வேண்டியது
வீட்டில் அல்ல என்பது மட்டும் உறுதி!
ப சிதம்பரம் இப்படி எல்லாம் அறிவுபூர்வமாக பேசினால் புரியாது!
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதானுங்க .தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது .அரசு சொத்துக்களை அபகரிக்கும் கொள்ளை கூட்டத்தையெல்லாம் என்கவுண்டர் மூலமும் ,சிறையடைப்பு மூலமும் உபி தீர்த்துக்கட்டிவிட்டது .வளங்கள் எல்லாம் அரசு கருவூலத்திக்கு வருகின்றது .இங்கு கொள்ளைகள் தீர்ந்தப்பாடில்லை .4720 கோடி ஆட்சியாளர்களின் பினாமிகளுக்கும் வெறும் 36 கோடி மட்டுமே அரசு கருவூலத்திற்கு வருகின்றது .வளங்களை கொள்ளையடிப்பவர்கலை தடுப்பவர்கள் லாரி ஏற்றி கொலைசெயகின்றார்கள் .அரசு சொத்துக்களை களவாடிவிட்டு மாநிலத்திற்கு வருமாணவேண்டி சாராயம் விற்பதாக கூறி ஆளுபவர்களே சாராய ஆலைகளை ஏற்படுத்தி சாராயத்தை விற்று கிழ்நிலையில் உள்ள ஒரு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டு இந்தியாவுக்கே மாதிரியான மாநிலமென்று இறுமாப்பு கொள்கின்றார்கள் .உங்களைப்போன்ற படித்தவர்களும் அவர்களுக்கு கைகொட்டி ஆரவாரம் செயகிண்றீர்கள் .மறுசுதந்திரம் வேண்டி மக்கள் தவிக்கின்றார்கள் .
ரீ கவுண்ட்டிங் ஆளுங்க சொல்றதை நாங்க நம்புறதே இல்ல ....
PC worried about his RS seat and the MP seat for KC. People know that all the borrowings of TN government are for schemes and capital expenditure and these funds are getting robbed through corruption in high places. If DMK elected to power again, it will not only ruin the economy by pushing the borrowings by another 100%, emptying the treasury to harvest votes from women, deny salary and retirement benefits to government employees, deny employment to the corporation house keeping/sweeping staffs but also push TN behind by another 100 years. Hope and pray God that DMK should not come to power again
"எனது கருத்து பயனே கிடையாது" இவர் சொன்னதிலேயே உண்மையான வார்த்தைகள் இவையே "பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்." குறள் எண் 191 கேட்போர் அனைவராலும், வெறுக்கத் தக்க வகையில், பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான். மகனுக்கு சட்ட சபை தனக்கு ராஜ்ய சபை காங்கிரசில் வாய்ப்பில்லை கழகம் காக்குமோ அப்பதவிக்காகவா இந்த கூப்பாடு ?
நிறம் மாறும் பச்சோந்திகள்.
உண்மையில் கிருத்துவர்கள் அதிகமாக வுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கு( அங்கிருந்து கிடைக்கும் வரவை விட) ஐந்து மடங்கும் முஸ்லிம்கள் மிகப்பான்மையாக உள்ள காஷ்மீருக்கு பத்து மடங்கு நிதியும் செலவிட்டது இவரது பட்ஜெட்டில். இப்போதும் அதுவே தொடர்ந்து அளிக்கப்படுகிறது. ஊழல் குறைவாக இருப்பதால் உ.பி க்கு கடன் வாங்கும் தேவையே குறைவு. மெத்தப் படித்த இவர் பொய் சொல்லலாமா?.மேலும்
-
அதிகாரிகள் பேச்சுக்கு அழைப்பதாக கூறி ஆசிரியர்களை ஏமாற்றி கைது செய்த போலீசார்
-
ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது; 2 - 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் 'அட்வைஸ்'
-
ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
இந்தோனேஷியா சீற்றத்துடன் எரிமலை; மக்கள் வெளியேற்றம்
-
24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்
-
நிர்வாக சீர்குலைவைத் தமிழகம் இனியும் தாங்காது: அண்ணாமலை