இந்திய ராணுவ தளபதி யு.ஏ.இ., இலங்கைக்கு பயணம்
புதுடில்லி: இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி யு.ஏ.இ., மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
நட்பு வெளிநாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் விதமாக ந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று ( 5-ம் தேதி ) முதல் 8-ம் தேதி வரையில் யு.ஏ.இ., மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் யு.ஏ.இ.,க்குசெல்லும் தளபதி ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள், வீரர்களுடன்கலந்துரையாட உள்ளார்.
தொடரந்து 7 மற்றும் 8-ம் தேதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தளபதி இலங்கை ராணுவ தளபதி, பாதுகாப்புத்துறை துணை அமைச்சர், பாதுகாப்புத்துறை செயலாளர், மூத்த ராணுவ மற்றும் பல்வேறு தலவர்களை சந்தித்து பேச உள்ளார்.
தளபதியின் இரு நாடுகள் பயணம் இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதற்கும், ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கும் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை, உறுதிப்படுத்துகிறது என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
கங்கை நதிக்கரை படித்துறைகளில் ஹிந்துக்கள் மட்டுமே புனித நீராட வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கோரிக்கை
-
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு மீண்டும் முதலிடம்
-
அமெரிக்காவில் சட்டங்களை மீறும் இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படலாம்: தூதரகம் எச்சரிக்கை
-
கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் டிரம்ப் உறுதி
-
உங்க கனவை சொல்லுங்க திட்டமே ஒரு மோசடி நாடகம்; இபிஎஸ் விளாசல்
-
ஜார்க்கண்டில் மனித- விலங்கு மோதல் அதிகரிப்பு; யானை தாக்கியதில் 6 பேர் உயிரிழந்த சோகம்