மதுபாட்டில் கடத்திய இருவர் கைது 

திருத்தணி: திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சேர்ந்த சிவா 40, சஞ்சய் குமார், 25, இருவரும், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தாழவேடு காலனி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த சிவா, சஞ்சய்குமார் ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 100 மதுபாட்டில்களை இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement