வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டரில் தீ

நத்தம்:நத்தம் அருகே நடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் 45. இவர் நேற்று தனது டிராக்டரில் அலங்காநல்லுார் பகுதிக்கு வைக்கோல் லோடு ஏற்றி சென்றார்.

நடுவனுார் அருகே புதுக்குளம் பகுதியில் சென்ற போது அங்குள்ள மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement