மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., 28) கோலாகலமாக நடைபெற்றது.






இதைதொடர்ந்து இன்று காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மதுரை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளகனிவாய் பெருமாளும், முருகப் பெருமானும் வந்திருந்தனர். இதை காண கட்டண அடிப்படையில் 6 ஆயிரம் பேரும், இலவசமாக 6 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கல்யாணத்திற்காக அம்மன் தாலியுடன் இணைக்கப்படும் குழிபொட்டு தாலி நேற்று சீர்வரிசையுடன் யானைக்கல் லாலா சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்லக்கில் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இன்று 1.50 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து அளிக்க மதுரை சேதுபதி பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக இரு தேர்களிலும் 1732.14 கிலோ எடையில் திருச்சி 'பெல்' நிறுவனம் மூலம் கோயில் நிதி ரூ.35 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட புதிய இரும்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வைகை ஆற்றில் மே 1ம் தேதி கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு முதல்முறையாக தண்ணீரை மாற்று பாதையில் விட நீர்வளத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் திறக்காமல் கால்வாய் வழியாக செல்லூர் கண்மாய்க்குள் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு முன் திறந்தாலே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு தண்ணீர் சென்று விடும். வினாடிக்கு 500 முதல் 600 கன அடி வீதம் மொத்தமாக 7 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (5)
Rathna - Connecticut,இந்தியா
28 ஏப்,2026 - 11:24 Report Abuse
பல்லாயிரம் ஆண்டு பழமையான மதுரை, இந்த திருமணம் மூலம் அதன் பல ஆயிரம் ஆண்டு தொன்மையை பறை சாற்றி கொண்டு உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்னால், படையெடுத்த ஆப்கானிய, துருக்கிய காட்டான்கள் அந்த கோவிலை 48 ஆண்டுகள் பூட்டி வழிபாடு இல்லாமல் செய்தனர். விஜய நகர பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணா என்ற கன்னட, தெலுகு இனத்தவர் கனவில் அம்மை மீனாட்சி தோன்றி தனது மதுரை மக்களை விடுவிக்குமாறு கோருகிறாள்.
குமார கம்பண்ணா மதுரை கோவிலை, அந்த நகரை, விடுவித்து வழிபாடுகளை மீண்டும் துவக்குகிறார். மதுரையில் மக்களுக்கு கொடுமைகள் செய்த ஆப்கானிய கொலைகாரன் அங்கு இருந்து தப்பி, திருப்பரங்குன்றம் மலையில் பதுங்கி இருக்க அங்கே அவன் கம்பண்ணாவின் வீரர்களால் கொலை செய்யப்படுகிறான். சில மாதங்கள் முன்பு திருப்பரங்குன்றத்தில் அன்னியனுக்காக நடத்தப்பட்ட நாடகத்தை நாம் நன்கு அறிவோம்.
அந்த வழியில் வந்த திருமலை நாயக்கர் மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தை பல ஆயிரம் ஆண்டு தமிழ் கலாச்சாரம் மாறாமல் திரும்ப கொண்டு வருகிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக கள்ளஅழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை நடத்தி தமிழ் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்கிறார். தமிழக வரலாற்றை போற்றிய, இந்த பெரிய அரச பெருமக்களுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். 0
0
Reply
SJRR - ,இந்தியா
28 ஏப்,2026 - 11:14 Report Abuse
அனைவரும் இன்புற்று வாழ அன்னை மீனாட்சி அருள்புரியவேண்டும். 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
28 ஏப்,2026 - 10:23 Report Abuse
மீனாட்சி அருளால் தமிழகத்துக்கு
மே 4ம் தேதி நல்லது நடக்கட்டும் 0
0
Reply
தங்கப்பாண்டி - ,
28 ஏப்,2026 - 09:48 Report Abuse
மீனாட்சி தாயே வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருமாறு வேண்டிக்கொள்கிறேன் 0
0
Reply
மேலும்
-
'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம்; கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
-
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்
Advertisement
Advertisement