போலீஸ் கொடி அணிவகுப்பு

ஊட்டி: ஊட்டியில் மே 4 ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி, மே 3 ல் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

ஊட்டி லாலி இன்ஸ்டிடியூட் பகுதியில் துவங்கிய கொடி அணி வகுப்பை, ஏ.டி. எஸ்.பி., மணிகண்டன் துவக்கி வைத்தார். பேண்டு வாத்தியங்கள் முழங்க,அணிவகுப்பு,சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட், லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது.

ஓட்டு எண்ணிக்கையின் போது, அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்க, பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்த கொடி அணிவகுப்பு நடந்தது. இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள். எஸ்.ஐ.க்கள் உட்பட, 130 போலீசார் பங்கேற்றனர்.

Advertisement