டிஜிட்டல் லாக்கர் சேவை ஆக்ஸிஸ் வங்கி துவக்கம்

'ஆக்ஸிஸ்' வங்கி, தனது முதல் 'டிஜிட்டல் லாக்கர்' மையப்படுத்தப்பட்ட கிளையை மும்பையில் துவங்கியுள்ளது. தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் உயர் பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கிளை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், வரும் 2030ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 6 கோடி லாக்கர் வசதி தேவைப்படும் நிலையில், தற்போது தோராயமாக 60 லட்சம் லாக்கர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் லாக்கர் கிளைகளை குடியிருப்பு வளாகங்களுக்கு அருகில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்



* தானியங்கி தொழில்நுட்ப முறையிலான லாக்கர் சேவை
* பல அடுக்குகள் கொண்ட கண்காணிப்பு வசதி

* சென்சார், பாஸ்வேர்டு, ஓ.டி.பி., அடிப்படையிலான பாதுகாப்பு வசதி

* ஏ.டி.எம்., மையத்தை போல 24 மணி நேரமும் லாக்கரை அணுகலாம்.

Advertisement