மகள் மாயம் தாய் புகார்

ஆண்டிபட்டி, மே 21 -

ஆண்டிபட்டி அருகே குன்னூரைச் சேர்ந்தவர் மகாராஜன் மனைவி லட்சுமி, இவர்களது 17 வயது மகள் குன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். இம்மாதம் 10ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தாய் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement