காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்கணும்; ஆணையர்களுக்கு உத்தரவு
கோவை: உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான, தரமான சேவை மக்களுக்கு வழங்க ஆணையர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. துறையின் கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு, அன்றாடம் பணியில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதில், 'மக்களுக்கு வெளிப்படையான மற்றும் கால தாமதமின்றி சேவை வழங்க முதல்வர் கூறியுள்ளார். சுகாதாரம் குறித்து ஆணையர்கள் தினசரி காலை 7:00 மணிக்கு முன்பாக களத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
பொது கழிப்பறைகள், பஸ் நிலையங்களில் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து, துாய்மையாக பராமரிக்க வேண்டும். 'பணியாளர்களின் வருகைப்பதிவு தினசரி கண்காணிக்க வேண்டும். தேவையற்ற விடுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சாலைகளில் படிந்துள்ள மண் தினசரி அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
ரிசர்வ் சைட், நீர்நிலைகள், சாலையோரங்களில் மரம் வளர்த்து பசுமை பரப்பை உருவாக்க வேண்டும். பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பழுதாகியுள்ள தெருவிளக்குகளை, 24 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும்
'குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளின் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சரி செய்ய வேண்டும். கட்டட அனுமதியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விதி மீறினால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
அதிகாரிகள் பொது கழிப்பிடத்தைத் தான் பயன்படுத்த வேண்டும் எனும் உத்தரவு வர வேண்டும்.
வாங்குன காசுக்கு மேல கூவுறுங்கீளே சாமி
படிப்பை ஆரம்பத்திலேயே விட்டு விட்ட விஜய் அதிகாரிகளுக்கு ஒண்ணாங்கிளாஸ் பாடம் எடுக்கிறாரா?
எழுதியதைப் படிக்கவே தெரியாமல் திணறுபவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
tamilan உனக்கு எப்படி ஒரு வாரம் நிக்காம போகுது...
முதலில் வருவாய்த் துறையின் பக்கம் அரசு தனது கவனத்தை செலுத்த வேண்டும். வருவாய்த் துறை அலுவலக கட்டிட சுவர்கள் கூட, லஞ்சம் கேட்கும் அவலம்!
தபால் RMS போல் BMS சேவை துவங்கலாம். தபால் பெற சிறு இடம் போதும். சாலை எதிரில் தபால் நிலையம் இருந்தால், சென்னை போன்ற இடங்களில் சாலை கடப்பது வெகு நேரம் ஆகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் சில ஆவின் பாலகம் உண்டு. புற நகர் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர், ஆவின், டான் டீ, காதி தேன் போன்ற பொருட்கள் ஒரே இடத்தில் விற்கலாம். பஸ் நிலையத்தில் உணவு பொருட்கள் தரம் அறிய முடியாது. பயணத்தில் தொல்லை தரும்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு கீழே உள்ளவர்கள், நேர்மையாக இருக்க வேண்டும் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும், அதனை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்கள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலமாக, திராவிட கட்சிகள் ஆட்சியில் ஊழலில் மூழ்கி திளைக்கும் அரசு நிர்வாகம், அவ்வளவு எளிதில் லஞ்சத்திலிருந்து விடுபட வாய்ப்பு இல்லை. எனவே அவர்களை சுறு சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம்தான் உள்ளது. மேய்ப்பான் ஒழுக்கமாக இருந்தால் மேய்க்கப்படுவோரும் நிச்சயம் ஒழுக்கமாக இருப்பர்!
Well done CM sir it is exemplary achievement marvelous
என்ன சொன்னாலும், யார் வந்தாலும் குப்பைகளை தினமும் அகற்றும் செயல்களில் உள்ள மெத்தனம் மாறவில்லை. நான் வசிக்கும் காவெட்டி லே அவுட் (சௌரிப்பாளையம்,கோவை) வழிகளில் குவிந்துள்ள குப்பைகள் சொல்லி மாளாது.எங்கள் தொகுதி எம்எல்ஏ கிரிபிரசாத் அவர்களுக்கு இந்த இடத்தை பற்றி ஏதேனும் தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது.
செயலாளர் திரு ககந்தீப்சிங் அவர்கள் மிகவும் திறமையானவர். நேர்மையானவர். சுனாமி ஏற்பட்டு பாதிப்படைத்தபோதும், வார்தா, கஜா புயல் பாதிப்புகளின்போதும் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோதும் மிக திறமையாக பணியாற்றியவர். அவர் சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்தால் உள்ளாட்சி பணிகளை சிறப்பாக செய்துகாட்டுவார். அதை செய்வது அரசின் கையில் உள்ளது
“அடப்பாவி... 6 மணிக்கு மேலே அவன் நடவடிக்கை என்னென்னு தெரியாம... அவன நம்புறீங்களடா”...ன்னு வடிவேல் காமெடியில... டைரக்டர் கஜேந்திரன் ஒரு வசனம் சொல்வார்... அதுதான் நினைவுக்கு வருகிறது... உங்க கமெண்ட்ட படிக்குறப்ப... ஆமா... திறமையானவர், நேர்மையானவர்..னு சொன்னீங்களே... அது எப்பவுமேவா... இல்ல... இப்பத்தானா...? இவர் கடந்த திமுக.. அதிமுக ஆட்சியிலும்தானே அதிகாரியாக இருந்தார்...?
தீயமுக காலத்தில் அதிகாரிகளை ஏவல்காரராக வைத்திருந்தனர்.
அப்போ கேடுகெட்ட திமுக இருந்தது....உனக்கு இப்போ இருநூறு வருதா
இத்தனை வருடங்கள் எப்படி வேலை செய்தார்களோ அப்படியே தான் தொடர்வார்கள்.... இது என்ன இன்று புது மிரட்டல் ? கார் மேல் தொங்கி சென்றதற்கு ஒரு ஒழுங்கு நடவடிக்கை தேவை...
ஒழுங்கு நடவடிக்கைன்னா என்னாங்கோ? காரில் தொங்கிக்கொண்டு போகாமல் நன்றாக வசதியா நின்றுகொண்டு போகும்படி காரின் சைடு ஸ்டெப்பை பெரிசா வைக்கணும். அது சரி எவன் காரில் இந்த கழிசடைகள் தொங்கி கொண்டு போச்சுங்களோ அந்த காரையே கண்ணுல பார்க்க முடியலீங்களே.