நாளை கிராம சபை

தேனி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை(அக்.,2) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கூட்டம் நடத்தப்படும் இடம், நேரம் பற்றி பொதுமக்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை 'நம்ம கிராம சபை' செயலியில் உள்ளிடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம், ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பார இயக்கம் உள்ளிட்ட 12 பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.

Advertisement