வேன் மோதி தொழிலாளி சாவு

பவானி: பவானி அருகே, செலம்ப கவுண்டம்பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் வீரன், 55, கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, அந்தியூர் செல்லும் சாலையில் நடந்து சென்றவர், தொட்-டிபாளையத்தில் திப்பிச்செட்டிபாளையம் பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது, பவானியிலிருந்து தேங்காய் தொட்டி ஏற்றி வந்து கொண்டிருந்த ஈச்சர் வேன் மோதி-யதில் சம்பவ இடத்தில் பலியனார்.



இதுகுறித்து, கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த டிரைவர் சல்மான், 29 மீது வழக்குப்பதிவு செய்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement