தனுஷ்கோடியில் படகிற்கு தீ வைப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் புதுரோடு ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த மீனவர் பால்ராஜ். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பால்ராஜ் உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் ஏற்றி நிறுத்தினர்.

இந்த படகில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் இருந்தது. அன்றிரவு மர்ம நபர்கள் படகிற்கு தீ வைத்தனர்.

இதில் படகில் இருந்த வலைகள், படகு முற்றிலும் எரிந்தது. புகாரில் தனுஷ்கோடி மரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement