அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 48 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி ஆட்சி குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் அசோக் வரவேற்றார்.

மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, பட்டதாரிகளான நீங்கள் கனவு காணுங்கள். கனவுக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கை எளிதாக இருக்காது. எதிர்காலத்தில் தாங்கள் கற்ற கல்வியை கொண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். வளமான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும் மற்றவர்களுக்கு உதவி செய்து உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். இளங்கலை, முதுநிலை உள்ளிட்ட 37 துறைகளில் பட்டப் படிப்பை முடித்த 1396 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி தாளாளர் அபிரூபன், கல்லுாரி நிர்வாகம் செய்தனர்.

Advertisement