நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்
புதுடில்லி: நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் வகையில் ' கர்பா' பாடல் ஒன்றை எழுதி உள்ளார்.
இந்தியாவில் நவராத்திரி காலம் துவங்கி உள்ளது. இதனையடுத்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இப்பண்டிகை வட மாநிலங்களில் தசரா பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி 'கர்பா ' பாடல் ஒன்றை எழுதி உள்ளார். கர்பா என்பது பாரம்பரியமான குஜராத் நடனமாகும். முக்கியமாக நவராத்திரி காலத்தில் இந்த நடனம் நடக்கும்.
இது குறித்து அவர் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இது நவராத்திரியின் புனிதமான நாள். அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'ஆவடிக்கலை(AavatiKalay)' என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி உள்ளேன். நமக்கு துர்காவின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், இந்த பாடலை பாடிய பாடகர் பூர்வ மந்திரிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து (6)
ஆரூர் ரங் - ,
07 அக்,2024 - 14:12 Report Abuse
பம்முற டுமீல்ஸுக்கு வான்கோழி எழுத்தாளர் எழுதுனா மட்டுமே பிடிக்கும். இல்லேன்னா தகரமுத்து.
0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
07 அக்,2024 - 13:54 Report Abuse
கவியவதாரம் /பெருமையோ பெருமை.
0
0
Reply
பாமரன் - ,
07 அக்,2024 - 12:54 Report Abuse
தான் எழுதிய..??..இந்த பாடலையாவது டெலிப்ராம்ப்டரை பார்க்காமல் படிப்பீங்களா ஜி...??
0
0
N Sasikumar Yadhav - ,
07 அக்,2024 - 13:20Report Abuse
ஊ....பியான உங்களுக்கு 200 ரூபாய் கொடுக்கும் திருட்டு தீயமுகவின் தலைவர் துண்டுச்சீட்டை பார்த்துக்கூட தப்புதப்பாக படிப்பதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீர் திரு பாமூரான் அவுருகளே
0
0
Duruvesan - Dharmapuri,இந்தியா
07 அக்,2024 - 13:30Report Abuse
என்ன இருந்தாலும் விடியல் கட்டுமர கவிதை போல் வராது
0
0
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
07 அக்,2024 - 14:14Report Abuse
எவன் துண்டு சீட்டை பார்த்து படிச்சா எனக்கென்ன ஜி... ஆனால் நான் இருநூறு வாங்கிட்டேன்னு கண்டுபிடிச்ச ஒங்க திறமைக்கு சுவரேறி குதிச்சி பாக்கெட்ல ஒண்ணுமில்லைன்னு கண்டுபிடிக்கும் சிபிபிபில வேலை பார்க்கறீங்களோன்னு சந்தேகமா இருக்கு சாரே...
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement