மேற்குவங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 பேர் பலியான சோகம்!

1

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.



மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில், நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல், பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று(அக்.,07) திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'இதுவரை நாங்கள் 3 பேர் உடல்களை மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மீதமுள்ள 4 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. என்றார்.

Advertisement