மனைவி கண் முன் கணவர், குழந்தை பலி

தேனி: தேனி அரண்மனைப்புதுார் கோட்டைப்பட்டி அருகே காரின் பின்புறம் டூவீலர் மோதிய விபத்தில் எதிரே வந்த பிக்கப் வேன் சக்கரத்தில் சிக்கி மனைவி கண் முன்னே கணவர் ராம்குமார் 27, மகன் மிதுல்ஸ்ரீராம் 2, பலியாகினர்.

வருஷநாடு பால்சாமி மகன் ராம்குமார். மனைவி ரமணாதேவி 25. மகன் மிதுல்ஸ்ரீராமுடன், டூவீலரில் தேனி அரண்மனைப்புதுாரில் இருந்து வருஷநாடு நோக்கிச் சென்றனர். நேற்று மதியம் 2:50 மணிக்கு கோட்டைப்பட்டி முதல் வலையபட்டி நோக்கி சென்ற கார், எதிரே வந்த வேனிற்காக வேகத்தை குறைத்தது.

இதனால் ராம்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் காரின் பின்புறம் மோதியதில் ரோட்டின் வலது புறம் விழுந்தனர். அப்போது வேகமாக எதிரே வந்த பிக்கப் வேன் ராம்குமார், மிதுல்ஸ்ரீராம் மீது மோதியது. சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர். ரமணாதேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கார், வேன் டிரைவர்களிடம் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement