வரி உயர்வு ரத்து கோரி த.மா.கா., முறையீடு

ஈரோடு: ஈரோடு த.மா.கா., மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், நிர்-வாகிகள் சந்திரசேகர், ரபீக் உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலு-வலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:

தி.மு.க., அரசு கடந்-தாண்டு, மாநகராட்சியில், 150 சதவீதம் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியது. இந்நிலையில் மீண்டும், 6 சதவீதம் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியுள்ளது. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட, 6 சதவீத வரிகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement