கடன் தொல்லையால் விபரீதம்

ஈரோடு: ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகரை சேர்ந்தவர் முத்து-பாவா, 50; மூலப்பட்டறையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். ஒரு மாதமாக வியாபாரம் மந்தமாக இருந்ததால், கடன் வாங்கி நடத்தி வந்தார். இதனாலே் மனவேதனை அடைந்த முத்-துபாவா நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


*ஈரோடு, பழையபாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் நடராஜன், 52; பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்-பனை செய்து வந்தார். வியாபாரம் சரிவர இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.

Advertisement