கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி
செஞ்சி : கிரிக்கெட் விளையாடியபோது வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார்.
செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி மகன் மகேந்திரன்,32: இவர் நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.
அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரை, அவரது நண்பர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த மகேந்திரனுக்கு பவித்ரா, 28, என்ற மனைவியும், துருவா, 3, என்ற மகனும் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement