உலக அஞ்சல் தின விழிப்புணர்வு பேரணி


உலக அஞ்சல் தின
விழிப்புணர்வு பேரணி
குளித்தலை, அக். 10-
குளித்தலை தலைமை தபால் நிலையம் சார்பில், நேற்று உலக அஞ்சல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குளித்தலை தலைமை தபால் நிலைய அதிகாரி செல்வராஜ் தலைமை வகித்தார். அஞ்சலக ஆய்வாளர் ஸ்டாலின், உதவி அதிகாரி ஜாஸ்மின் பிரியா, குப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி குளித்தலை பஸ் ஸ்டாண்டு காந்தி சிலையில் இருந்து, திருச்சி -கரூர் நெடுஞ்சாலை வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்றம், தாசில்தார் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வழியாக சுங்ககேட் வரை சென்று விட்டு, மீண்டும் திரும்பி தலைமை தபால் நிலையம் வந்தடைந்தது.
பேரணியில் தலைமை தபால் நிலைய ஊழியர்கள் கலந்து
கொண்டனர்.

Advertisement