நள்ளிரவில் முதல்வர் திடீர் 'விசிட்' 

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென நகரப்பகுதியில் உலா வந்து, போலீசாரின் ரோந்து பணிகளை பார்வையிட்டார்.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்வர் ரங்கசாமி நகரப் பகுதியில் திடீரென காரில் உலா வந்தார். அப்போது, போலீசார் ரோந்து பணிகளை சரியாக செய்கின்றனரா என, காரில் சென்றபடி பார்வையிட்டார்.

பின்னர், சுய்ப்ரேன் வீதியில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து, டீ குடித்தார். அப்போது, அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் முதல்வரிடம் பேசி மகிழ்ந்ததுடன், செல்பி எடுத்து கொண்டனர். முதல்வரின் திடீர் விசிட் காரணமாக போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement