த.வெ.க., மாநாட்டிற்கு இடம் விவசாயிக்கு பசு வழங்கல்

விழுப்புரம்: த.வெ.க., மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிக்கு, பசு, கன்று வழங்கப்பட்டது.

த.வெ.க., முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது. மாநாட்டிற்கான பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

மாநாட்டிற்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை, இதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் - ராஜாமணி தம்பதி வழங்கியுள்ளனர்.

வயது முதிர்ந்த இந்த தம்பதி, பிழைக்க ஏதாவது உதவி செய்ய வேண்டும் என த.வெ.க., நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

இதையொட்டி, கட்சியின் நிர்வாகியான, திருவள்ளூரைச் சேர்ந்த மணி என்பவர், 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பசுவை, கன்றோடு வாங்கிக் கொடுத்தார்.

இந்த பசு, கன்றை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், ராதாகிருஷ்ணன் - ராஜாமணி தம்பதியிடம் வழங்கினார்.

த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement