குட்கா பறிமுதல்: அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம்,ஜோதிமணி,வசந்தன்,சரவணக்குமார்,லாரன்ஸ் நத்தம் சிறுகுடி பகுதியில் உள்ள ஒருவீட்டில் ஆய்வு செய்தனர். பீரோவில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 65 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கியிருந்தது தெரிந்தது.

அதை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். நத்தம் சுற்றுப் பகுதிகளில் ஆய்வு செய்து 2 கடைகளுக்கு சீல் வைத்து 3 குற்ற வழக்குகளும் பதியப்பட்டது.

Advertisement