ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது

திண்டுக்கல்: தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி,துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு,ஆர்.எம்.ஓ.,புவனேஸ்வரி,ரத்த வங்கி மருத்துவர் லில்லி மலர் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கிக்கு அதிகளவில் ரத்தம் வழங்கியவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Advertisement