பெண்ணை தாக்கிய நபர் கைது
கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் தகராறில் பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைகது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மனைவி பச்சையம்மாள், 47. இவருக்கும் எதிர் வீட்டுக்காரர் கஞ்சமலை 56, என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.
கடந்த 8ம் தேதி மாலை நடந்த தகராறில் கஞ்சமலை இரும்பு கம்பியால் பச்சையம்மாளை தாக்கினார். தலையில் படு காயமடைந்த பச்சையம்மாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து கஞ்சமலையை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement