விளையாட்டு செய்திகள் வீரர்களின் மொபைல் போன் திருட்டு

சென்னை:நேரு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளயைாட்டு போட்டிகள் கடந்த 4ம் தேதி துவங்கி 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுக்கணக்கானோர் வந்துள்ளனர்.

அவர்கள் பல்வேறு தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். திருவாரூரைச் சேர்ந்த அபிஷேக், 18 சிவராஜ், 18, தஞ்சாவூரைச் சேர்ந்த அஜய்குமார், 18, திருப்பூரைச் சேர்ந்த நிரஞ்சனா பிரகாஷ், 23 ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்கினர்.
நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, நான்கு பேரின் மொபைல் போனும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வீரர்கள் புகார் அளித்தனர். அங்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement