விளையாட்டு செய்திகள் பல்கலை மண்டல பூப்பந்து வள்ளியம்மை சாம்பியன்

சென்னை:அண்ணா பல்கலை, கல்லுாரிகள் இடையிலான பூப்பந்து போட்டியில், பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வீராங்கனையர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

தமிழக பொறியியல் கல்லுாரிகள் இடையே, அண்ணா பல்கலை சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. பல்கலையில் இடம்பெற்றுள்ள கல்லுாரிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன.

அதன்படி, நான்காவது மண்டல மாணவியருக்கான பூப்பந்து போட்டி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

இதில், துவக்க சுற்று முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி அணி, அரையிறுதி போட்டியில் சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணியை வீழ்த்தினர்.

அடுத்து நடந்த இறுதிப் போட்டியிலும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை வீராங்கனையர் அந்தப் போட்டியில், எம்.ஐ.டி., கல்லூரி அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றனர்.

மூன்றாம் இடத்தை சாய்ராம் பொறியியல் கல்லூரியும், நான்காம் இடத்தை சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் பிடித்தன.

Advertisement