உ யிரிழந்தவர் அடையாளம் தெரிந்தது

சென்னை:சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஏரியில் நேற்று முன்தினம் மாலை, வாலிபர் ஒருவர் குதித்துள்ளார். இதை அறிந்த பூங்கா மேலாளர் வெங்கடேசன், 51, என்பவர், கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் இளைஞரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்ததில் அயனாவரம், பி.இ., கோவில் வடக்கு மாட வீதியைச் சேர்ந்த ராம்நாத், 30 என்பது தெரியவந்தது.

பின் தலையில், எட்டு மாதங்களாக அடிக்கடி வலி ஏற்பட்டு வந்ததால், ராம்நாத் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர், ஆறு மாதத்திற்கு முன் திருவான்மியூரில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

Advertisement