தரிசு நிலத்தில் தேங்கிய மழைநீர்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தரிசாக விடப்பட்ட நிலங்களில் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்கத் துவங்கியுள்ளது. விவசாயம் மேற்கொள்ளாமல் தரிசாக விடப்பட்ட நிலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தாலும் பலரால் விவசாய பணிகளை தொடர முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே நாற்றுகளை வளர்த்து முற்றிய நிலையில் இருந்தவற்றை மட்டும் கொண்டு சிலர் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் நாற்றுக்கள் வளராமலும் சில இடங்களில் விதைக்காமலும் உள்ளது. அடுத்தடுத்து பருவ மழை எப்படி இருக்குமோ என்ற தயக்கத்தில் விவசாயிகள் இன்னும் முழுமையாக விவசாய பணியில் இறங்காமல் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement