5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849117.jpg?width=1000&height=625)
புதுடில்லி: 5 ஆண்டுகளுக்கு பிறகு, ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான ரெப்போ ரேட் வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைந்துள்ளது. 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் வங்கி சேவைகளில் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![Narayanan Muthu Narayanan Muthu](https://img.dinamalar.com/data/uphoto/58669_062138568.jpg)
![ManiK ManiK](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![அப்பாவி அப்பாவி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
சமூக விரோதிகளுக்கு போலீசார் மீது பயமில்லை; அண்ணாமலை
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வித்தகுதி ரத்து!
-
அலாஸ்காவில் அமெரிக்க விமானம் மாயம்; 10 பேரின் கதி?
-
தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை; சென்னை ஐகோர்ட் கண்டிப்பு
-
திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேர் கைது
-
செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'