மகா சிவராத்திரி பூஜை

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளது.

திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் நாளை (பிப்.25) ல் பிரதோஷம், பிப்.26 ல் மகா சிவராத்திரி பூஜைகள் நடக்க உள்ளது. அன்று இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜையும், 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது.

Advertisement