கடலுாரில் பா.ஜ., கட்சியினர் மறியல்!

கடலுார்: கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்குடி பகுதியில் எரித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடலூர் மாவட்ட பாஜ., தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். மறுத்த நிலையில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது நீண்ட நேரம் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் நீடித்த நிலையில் திடீரென பாஜகவினர் கடலூர் பாண்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் இரும்புக்கரத்தை இப்போதாவது செயல்படுத்த வேண்டும்: இ.பி.எஸ்., கண்டனம்
-
திமுகவின் நிழலில் இருப்பதால் பயமின்றி உலாவும் குற்றவாளிகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
-
டிரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறார் ஜேம்ஸ் கேமரூன்
-
போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு
-
ஜெலன்ஸ்கியின் பொய்களில் மிகப்பெரிய பொய் அதுதான்: ரஷ்யா
Advertisement
Advertisement