25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு

தேனி : மாவட்டத்தில் 25 இடங்களில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வனத்துறை அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீர்நிலைகள், ஈரநிலப்பகுதி, நிலப்பகுதியில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். மாவட்டத்தில் இன்று காலை 6:30 மணி முதல் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதற்காக 25 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்மாயிலும் ஒரு வனத்துறை அலுவலர் தலைமையில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவை வழிநடத்த உள்ள வனத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட வன அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை வகித்தார். பறவைகளின் வகைகளை எவ்வாறு கண்டறிவது, சில பறவைகளின் சிறப்புகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது. மேலும் நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிபற்றியும் விவரிக்கப்பட்டது.
மேலும்
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
மிட்செல் - பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் வருண்; அடுத்தடுத்து சுழலில் சிக்கும் நியூசி.,
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
-
இந்திய அணி அபார பந்துவீச்சு
-
10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை; காங். எம்.பி.,க்கு அண்ணாமலை பதில்