முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக்கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் சங்க பேரவை பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, முதலில் அறிமுகம் செய்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சங்க பேரவையை பதிவு செய்வது், நிர்வாகிகளை தேர்வு செய்வது, கல்லுாரி வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்தனர்.

Advertisement