எருது விடும் விழா; 14 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாசரிப்பள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, ஜிஞ்சம்பட்டி வி.ஏ.ஓ., கிருஷ்ணன் புகார் படி, விழா ஏற்பாட்டாளர்களான முருகேசன், 60 மற்றும் மூவர் மீது, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல கே.பூசாரிப்பட்டியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, வேல்முருகன், 52, மற்றும் நால்வர் மீது மகராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். சாலிநாயனப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் புகார் படி முனுசாமி, 58, மற்றும் நால்வர் மீது, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement