ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு

மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த சக்திகாந்ததாஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். அவர் சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த நோட்டு வடிவமைப்பு மஹாத்மா காந்தி வரிசையில் உள்ள ரூ.100, ரூ.200 நோட்டுகளை போலவே இருக்கும் எனவும், கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் செல்லுபடியாகும் எனவும் கூறியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி
-
ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் வேகம்; டெண்டர் வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்
-
தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு
-
பாகிஸ்தான் ரயிலில் கடத்தப்பட்ட 104 பேர் மீட்பு; பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக்கொலை
-
பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்; போக்குவரத்து ஆணையம் பரிந்துரை
-
மாசிமகம் சக்கரபாணி கோவில் தேரோட்டம் கோலாகலம்
Advertisement
Advertisement