அறிவியல் ஆயிரம் ரத்த நிலா

அறிவியல் ஆயிரம்


ரத்த நிலா

சந்திர கிரகணம் மார்ச் 14ல் நிகழ்கிறது. சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமி நடுவில் வரும். சூரிய ஒளியை பூமி மறைக்கிறது. இதனால் பூமியின் நிழல்தான் நிலவில் விழுகிறது. இதுதான் சந்திர கிரகணம். இது இந்தியாவில் தெரியாது. இது 'சூப்பர் மூன்'
நிகழ்வும் கூட. அன்று நிலவானது பூமிக்கு அருகில் வருவதால் சூரிய ஒளி பூமியின் காற்று
மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால் அலை நீளம் அதிகமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' எனப்படுகிறது.

Advertisement