ஏப்ரலில் ஓட்டத்திற்கு டிராக் தயார்

மதுரை; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.8.24 கோடியில் செயற்கை தடகள டிராக் அமைப்பதில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 3வது அடுக்கு ரப்பர் துகள்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது.
400 மீட்டர் தடகள டிராக்கில் இரண்டடுக்குகளாக கருப்புநிற ரப்பர் துகள்கள் பூசப்பட்டு காயவிடப்பட்டுள்ளது.
டிராக்கின் உட்பகுதியில் கால்பந்து அரங்கிற்காக இயற்கை புல் நடுவதற்காக மண் தயார்படுத்தப்பட்டுள்ளது. டிராக்கில் 3 வது அடுக்கு ரப்பர் துகள்கள் பூச்சு முடிந்ததும் உள்ளே இயற்கை புற்கள் நாற்றுகளாக நடவு செய்யப்படும். 2024 மார்ச்சில் துவங்கிய பணியில் 90 சதவீதம் முடிந்துள்ளது. ஏப். 15க்கு மேல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திடம் டிராக் ஒப்படைக்கப்படும். அதன் பின் முதற்கட்டமாக தடகள சங்கங்கள் சார்பில் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி
Advertisement
Advertisement