அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீ காரணமாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மிசோரி, அர்கன்சாஸ் மற்றும் கன்சாஸ் ஆகியவை மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மிசோரியில், இரவு முழுவதும் சூறாவளி தாக்கி, வீடுகளை இடித்து தரைமட்டமாகியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையில், டெக்சாஸில், புழுதிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்துகளில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். புயல்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மேலும் பேரழிவை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். புயல் அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் தள்ளி உள்ளது. இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும்
-
ஏமனில் ஹவுதி படையினர் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்; 24 பேர் பலி
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
ஏ.ஆர்.ரஹ்மான் உடல் நலம் ; முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி