விபத்தில் சிக்கிய அரசு பஸ் 20 பயணியர் தப்பினர்

அன்னவாசல்:அன்னவாசல் அருகே அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதில், 20 பேர் காயத்துடன் தப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அந்தன்குடிப்பட்டி பகுதியில், நேற்று இலுப்பூரில் இருந்து கீரனுார் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இந்த டவுன் பஸ்சில் பயணம் செய்த, 20 பயணியர் சிறு காயங்களுடன் தப்பினர். இவர்களை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக கீரனுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!
-
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை; அன்புமணி குற்றச்சாட்டு
-
வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்; கூட்டல் கழித்தல் கணக்குக்கு இ.பி.எஸ்., பதிலடி
-
கர்நாடகா சட்டசபையில் களேபரம் ; சபாநாயகர் மீது காகிதங்களை வீசி அமளி!
Advertisement
Advertisement