சுகாதார நிலையம் முன்புறம் தடுப்புகள் அமைக்க வேண்டும்


சுகாதார நிலையம் முன்புறம் தடுப்புகள் அமைக்க வேண்டும்


எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் பிரிவில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும், பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் காய்ச்சல், சளி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். காலை, 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் மருத்துவரை பார்க்க வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுகாதார நிலையத்தின் நுழைவுவாயிலில் தடுப்புகள் இல்லாததால், நாமக்கல், துறையூர் மெயின் ‍ரோட்டில் இருந்து வரும் வாகனங்களால், அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் நடக்கிறது. எனவே, சுகாதார நிலையத்தின் முன்புறம் விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்புகள் அமைக்க வேண்டும் அல்லது வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement