கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு


கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு


கரூர்:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில், மேட்டுமகாதானபுரத்தில் கஞ்சாவை பயிரிடுவதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஹரிதாஸ், 30, என்பவரிடமிருந்து கஞ்சா நடவு செய்ய வைத்திருந்த செடிகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement