குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 804 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா என பல்வேறு துறை சார்ந்த 804 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, சப் கலெக்டர் முகுந்தன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement