என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி தர்ணா 

புதுச்சேரி : சுகாதாரத்துறை என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி தர்ணாபோராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி சுகாதாரத்துறையில், தேசிய சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்.,) கீழ் செவிலியர்கள், உதவி செவிலியர்கள் பல்வேறு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகினறனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் நேற்று, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisement