பொது உணவகத்தில் சண்டை வாலிபருக்கு 'காப்பு'
மறைமலைநகர், மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்; அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த நபர், 'சிக்கன் ரைஸ்' கேட்டு உள்ளார்.
'ஆர்டர்' செய்து நீண்ட நேரமாக சிக்கன் ரைஸ் வராததால், அந்த நபர் கடையில் இருந்த அருண்பாண்டியனை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர்.
இதில், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்த சூர்யா, 22, என்பவர், தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, சூர்யாவை கைது செய்து, விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement