சவாரி ஏற்றுவதில் தகராறு ஓட்டுநரை தாக்கிய சி.பி.ஐ., நிர்வாகி கைது
கொடுங்கையூர், ஏகொடுங்கையூர், முருகப்பா தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 33; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம், சின்னாண்டி ஆட்டோ நிறுத்தத்தில் சவாரி பிடிப்பதில், சக ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது. பின், சவாரி முடித்து, அன்றிரவு வீட்டிற்கு வந்தார்.
அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்த 10 பேர் கும்பல், பிரபாகரனை கடுமையாக கைகளால் அடித்து தாக்கினர்.
இதில் பிரபாகரனுக்கு இடது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது; இடது கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பிரபாகரனை தாக்கிய, கொடுங்கையூரைச் சேர்ந்த சி.பி.ஐ., கட்சியின் 34வது வட்ட செயலர், ஆட்டோ ஓட்டுநர் பாபு, 69; மற்றும் விஜயன் பாபு, 42, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை எச்சரித்து அனுப்பினர்.
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!