ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
ஓட்டேரி, புரசைவாக்கம் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35. ஆம்புலன்ஸ் ஓட்டுனர். கடந்த 31ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், பொன்னியம்மன் கோவில் தெரு அருகே, டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த மூவர், ராஜேைஷ தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்தனர்.
இதில், முன்விரோதம் காரணமாக ராஜேஷ் தாக்கப்பட்டது தெரிய வந்தது. புரசைவாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், 21, சுபாஷ், 19, மற்றும் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ் மற்றும் சுபாைஷ போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அலெக்ைஸ தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement