கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் தெருவில், 2020 மார்ச் 20ல் கஞ்சா விற்ற, சென்னை கொளத்துாரைச் சேர்ந்த சதீஷ், 32, ரவி, 30, ஆகிய இருவரையும், காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு பிளீடர் என்.நந்தகோபால் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், ரவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
***
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!