பிரியாணியில் 'கூல் லிப்' அதிகாரிகள் விசாரணை

திருநின்றவூர், திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் கவுதம், 24. இவர், நேற்று மதியம், சொமோட்டோ 'ஆன்லைன்' செயலி வாயிலாக, திருநின்றவூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில், 379 ரூபாய்க்கு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

கவுதம், பார்சலை பிரித்து பார்த்தபோது, பிரியாணியில் 'சுவைத்து' போட்ட 'கூல் லிப்' போதை புகையிலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கடைக்கு சென்று விசாரித்தபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருநின்றவூர் போலீசார் அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement