அருங்காட்சியகமாக மாறுகிறது விக்டோரியா ஹால்: மேயர் பிரியா
சென்னை,
சென்னை கொளத்துார் மற்றும் திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை, ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், மேயர் பிரியா கூறியதாவது:
ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்தில் உள்ள, வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை புனரமைக்கும் பணி, 32.62 கோடி ரூபாயில் நடந்து வருகிறது.
இந்த அரங்கில் என்னென்ன சிறப்புகள் இருந்ததோ, அவற்றை பொதுமக்கள் அறியும் வகையில், அருங்காட்சியமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டடத்தின் முதல் தளத்தில் கலையரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடித்து, வரும் ஜூனில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
கொளத்துார் தொகுதியில் ஏதேனும் ஒரு பூங்காவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!